Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: அவுஸ்திரேலியா, கனடா மற்றும் அயர்லாந்து பயண ஆலோசனை

.

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பயண ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் போதும், அதன் பின்னரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என்பதால், வெளிநாட்டு பிரஜைகள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறும் எனவும் தேர்தலுக்கு முன்பும், தேர்தலின் போதும், அதன் பின்பும் பொது ஆர்ப்பாட்டங்கள் நடந்து வன்முறையாக மாறலாம் என்றும் அவுஸ்திரேலியா அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், “ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்க்குமாறு” அவுஸ்திரேலியா தனது நாட்டு பிரஜைகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, தேர்தல் காலத்தில் அரசியல் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் என்று அயர்லாந்து தெரிவித்துள்ளது.

ஆகையினால் இலங்கைக்கு பயணிக்கும் ஐரிஷ் பிரஜைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எனவும், ஆர்ப்பாட்டங்களை தவிர்க்கவும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற உள்ளதாகவும், இந்தக் காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என்றும் கனடா தனது பிரஜைகளுக்கு எச்சரித்துள்ளது.