Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

‘அநுரவே கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி’: தேசிய மக்கள் சக்தி அறிவிப்பு

.

தேசத்தின் கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த ஜனாதிபதி பதவிக்கு பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நாடு காணாது என உறுதியளித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் ஜனாதிபதி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோக்கத்திற்காக பொதுமக்கள் தங்களின் ஆதரவை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் உறுதிப்படுத்தியுள்ளார்.

“இது ஆரம்பம்தான். பிரஜைகளின் அங்கீகாரத்துடனும் உதவியுடனும் இந்த தேசத்தை கட்டியெழுப்புவோம்” என சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார் திசாநாயக்க இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அவர் சுமார 56 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.