Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க

.

மாக்சிசமென தன்னை அடையாளப்படுத்திய ஜேவிபி என்கிற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை எட்டாத நிலையில் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணப்பட்டு மாவட்ட ரீதியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் 02 இடங்களில் முன்னிலை வகித்த அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டு விருப்பு வாக்கு எண்ணப்பட்டது.

இதன் முடிவுகளுக்கமைய அனுரகுமார திசாநாயக்க , ஜனாதிபதியாக தேர்வானார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அநுர குமார திசாநாயக்கவுக்கு 105 நாடாளுமன்ற ஆசனங்களும், சஜித் பிரேமதாசவுக்கு 78 ஆசனங்களும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு 37 ஆசனங்களும், நாமல் ராஜபக்சவுக்கு 1 ஆசனமும் அரியநேந்திரனுக்கு 04 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

விருப்பு வாக்குகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் முன்னிலை வகிக்கின்ற போதிலும் மொத்த வாக்குகளை தொடுவது அவருக்கு கடினமாக இருந்த நிலையில் அனுர வெற்றிப்பெற்றுள்ளார்.

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 12,915,795 என்பதுடன் இதில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 12,632,003 ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 283, 792 ஆகும்.

விருப்பு வாக்கு முடிவுகள்

Oruvan

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 12,915,795 என்பதுடன் இதில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 12,632,003 ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 283, 792 ஆகும்.