Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

இலங்கையின் 3 ஆவது பலமிக்க அரசியல் கட்சியாக தமிழரசு!

.

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம் இலங்கையின் 3 ஆவது பலமிக்க அரசியல் கட்சி என்ற இடத்தி இலங்கை தமிழரசுக்கட்சி பிடித்துள்ளது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமையிலான தேசிய மக்கள் சக்தி 68,63,186 வாக்குகளை பெற்று 141 நேரடி ஆசனங்கள் 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் என 159 ஆசனங்களைக் கைப்பேரறி மூன்றி இரண்டு பெரும்பான்மை பலத்தை நிலைநாட்டியுள்ளது

அதற்கு அடுத்தாக ஐக்கிய மக்கள் சக்தி 19,68,716 வாக்குகளை பெற்று 35 நேரடி ஆசனங்கள்,5 தேசியப்பட்டியல் ஆசனங்கள் என 40 ஆசனங்களைக் ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் எதிர்கட்சியாகயாகவும் உருவாகியுள்ளது.

மூன்றாம் இடத்தில் இலங்கை தமிழரசு கட்சி 2,57,813 வாக்குகளை பெற்று மட்டக்களப்பில் 3 ஆசனங்களையும், அம்பாறையில் 1 ஆசனத்தையும், திருகோணமலையில் 1 ஆசனத்தையும், வன்னியில் 1 ஆசனத்தையும், யாழ்ப்பாணத்தில் 1 ஆசனத்தையும் என 7 நேரடி ஆசனங்கள் .இ தேசியப்பட்டியல் ஆசனம் என 8 ஆசனங்களைக்கைப்பற்றி 3 ஆவது பலமிக்க அரசியல் கட்சியாக உருவாகியுள்ளது.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணி 5 ஆசனங்களையும் கடந்தமுறை 145 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி புரிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெர முன 3 ஆசனங்களையும் முஸ்லிமும் காங்கிரஸ் 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 1 ஆசனத்தையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் சுயேச்சை குழு 17 ஒரு ஆசனத்தையும் இலங்கைத் தொழிலாளர் கட்சி 1 ஆசனத்தையும் சர்வஜன அதிகாரம் கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன .