Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மந்திரிமனையின் கூரைகளை அகற்றும் பணிகளில் தொல்லியல் திணைக்களம்!

மழைக் காலம் தொடங்கியுள்ளமையால், மந்திரிமனையின் மேல் கூரைகளின் பாரத்தால், சுவர்கள் இடிந்து விழும் அபாயம்

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு, அவற்றை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக பேணி, மழைக்காலம் முடிவடைந்த பின்னர் மீள பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக மந்திரிமனையின் பாகமொன்று இடிந்து விழுந்தது. 
முன்னதாக, சேதமடைந்து காணப்பட்ட அப்பகுதி மேலும் இடிந்து விழாமல், அதனைக் காப்பாற்றுவதற்காக இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டது. இந்நிலையில், அந்த இரும்புக் கம்பிகளை திருடர்கள் திருடிச் சென்றமையால், பாதுகாப்பின்றி இருந்த மந்திரிமனையின் குறித்த பாகம் கடந்த மாதம் இதே நாளில் மழைக்கு காரணமாக இடிந்து விழுந்தது. 

அதன் பின்னர், ஏனைய பாகங்கள் இடிந்து விழாமல் பாதுகாக்க, மீண்டும் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டன. 
இந்நிலையில், தற்போது யாழ்ப்பாணத்தில் மழைக் காலம் தொடங்கியுள்ளமையால், மந்திரிமனையின் மேல் கூரைகளின் பாரத்தால், சுவர்கள் இடிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக, கூரைகளை அகற்றும் நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. 

இந்த மந்திரிமனை அமைந்துள்ள நிலப்பகுதி தனியார் ஒருவருக்கு சொந்தமாக காணப்படுவதால், அதனை புனரமைக்க அவர் கடந்த காலங்ககளில் சம்மதம் தெரிவிக்காதமையாலேயே மந்திரிமனை கடந்த காலங்களில் புனரமைக்கப்படவில்லை என தொல்லியல் திணைக்களம் கூறியிருந்தது. 

தற்போது மந்திரிமனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகளை அகற்ற குறித்த உரிமையாளர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவற்றை தற்காலிகமாக அகற்றி பாதுகாப்பாக வைத்திருந்து, மழைக்காலம் முடிந்த பின்னர், மீள பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியுடன் தொல்லியல் திணைக்களம் கூரைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 

2__4_.jpg