Breaking News
கிளிநொச்சியில் கடலாமையுடன் ஒருவர் கைது..!
,
கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நாச்சிக்குடா கடற்கரையில் கடலாமையுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை முழங்காவில் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.