Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது ; கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும்

.

இலங்கை தமிழரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் துணை தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடைவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சி கட்டுக்கோப்பான கட்சி. அதை யாரும் மாற்ற முடியாது. தேர்தல் காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைப்பார்கள்.கட்சி கூடி முடிவை அறிவிக்கும். அது கட்சியின் முடிவு . இதன் பின்னர் பலரும் பல சந்திப்புகளை செய்வார்கள். அதன் பின்னர் சில முடிவுகளை தனிநபர்கள் எடுக்கும் நிலை உருவாகிறது. அவ்வாறே இந்த தேர்தல் நேரத்தில் இடம்பெற்றுள்ளது.

இத்தகைய நிலையில் யாருக்கு யார் ஒழுக்காற்று நடவடிக்கைள் எடுப்பது? தலைவருக்கு எதிராக எடுப்பதா? கட்சியைப் பொறுத்தவரை கட்சியில் ஒவ்வொருவரையும் பலர் சந்திப்பார்கள். தமக்கு ஆதரவு தருமாறு கேட்பார்கள். கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

தமிழரசுக் கட்சிக்கு கொள்கை இருக்கிறது. அது நிலையாக இருக்கும். சுமந்திரன் மீதும் தவறு இருக்கும். அது பேசிக்கொள்ளலாம். கட்சி நிலையாக இருக்கும். கருத்துச் சொல்வதற்கு சுதந்திரம் இருக்கு. அதற்காக எல்லோருக்கும் அந்தச் சுதந்திரம் இல்லை.தற்போது ஜனாதிபதித் தேர்தலே இடம்பெறவுள்ளது.அடுத்து வரும் காலத்தில் பல்வேறு தேர்தல்கள் நடைபெறவுள்ளது.அந்த நேரத்தில் பலரும் வருவார்கள். அந்த நேரத்தில் நாம் முடிவுகளை எடுப்போம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைந்துசெயற்படவேண்டும் என்பதே எமது விருப்பம்.ஆனால் இனி அது கனவாகவே இருக்கும் என்பதே எனது கருத்தாகவுள்ளது. பாராளுமன்றத்தில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று நினைக்கின்றீர்களா? புதியவர்களுக்கு அனுமதி இல்லையா?புதியவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் இவை தொடர்பில் அடிக்கடி ஊடக சந்திப்புக்களை நடாத்த வேண்டி வரும் என்றார்.