Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வெள்ளை மாளிகையில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்; இந்திய வம்சாவளியினருக்கு நன்றி கூறிய அதிபர் பைடன்!

.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.இந்த நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்பிக்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளின் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.வெள்ளை மாளிகையின் நீல அறையில் தீபத்தை ஏற்றி வைத்து, "ஜனாதிபதி என்ற முறையில், வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தீபாவளி நிகழ்ச்சியை நடத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். இது எனக்கு மிக முக்கியம். தெற்காசிய சமுதாயம், கமலா ஹாரிஸ் முதல் டாக்டர் மூர்த்தி வரை, என் நிர்வாகத்தில் முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர். அமெரிக்காவில் இப்படியான ஒரு சிறப்பான நிர்வாகத்தை கொண்டிருப்பதற்கு பெருமை கொள்கிறேன்" என்றார் பைடன். 

இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர்

இதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கான நன்றி தெரிவிக்கும் போது,"தெற்காசிய அமெரிக்க சமூகம், அமெரிக்க வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் வளப்படுத்தியுள்ளது. நீங்கள் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூகம்" என்றார்.மேலும், "இது என் வீடு அல்ல; இது உங்கள் வீடு. இன்று நாம் ஒரு மாற்றத்தை எதிர்கொள்கிறோம். அமெரிக்கா என்ற ஐடியாவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஜனநாயகம் எப்போதும் எளிதாக இருந்ததில்லை. நாங்கள் விவாதம் செய்கிறோம், கருத்து வேறுபாடு கொள்கிறோம், ஆனால் எப்போது என்னால் எங்கு வந்தோம் என்பதை மறக்கக் கூடாது" என்றார்.அமெரிக்கா முழுவதும் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய நிலையில், அந்த நிகழ்வில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் ஜில் பைடன் கலந்து கொள்ளவில்லை.