Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் கைது: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்!

,

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் கடல் பகுதியில் இருந்து நேற்று (பிப்.2) மீனவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் கடலுக்கு மீன் பிடி தொழிலுக்காக சென்றனர்.இவர்கள் மன்னார் எல்லைப் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி மண்டபத்தைச் சேர்ந்த ஒரு விசைப்படகு மற்றும் அதிலிருந்து பத்து மீனவர்களையும் சிறை பிடித்து விசாரணைக்காக மன்னார் துறைமுகப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த வகையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த எபிரான், கட்ரு, டிரோன், பிரசாத், முனியசாமி, சிவா, அந்தோணி, ஃபயாஸ், சேசு மற்றும் மண்டபம் காந்திநகரைச் சேர்ந்த ரவி ஆகிய பத்து மீனவர்களை இலங்கை கடற்படை ஒரு விசைப்படகுடன் சிறைபிடித்துள்ளது.அண்மையில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 360 விசைப்படகுகளுடன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 13 மீனவர்களையும் சிறை பிடித்தது. அப்போது மீனவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாக இரண்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதரை வரவழைத்து வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு தமிழக மீனவர்கள் 554 பேர் மற்றும் 72 விசைப்படகுகள் இலங்கை கடப்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் படகுகள் அரசு உடைமையாக்கி மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.