Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழர் பகுதியை குறிவைக்கும் சீனா; ஒன்றரை பில்லியன் ரூபாய்க்கு மானியம்

.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மீனவ சமூகங்களுக்கு தயாரிக்கப்பட்ட வீட்டுத் திட்டம், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் அரசி உட்பட 1.5 பில்லியன் ரூபா மதிப்பிலான மனிதாபிமான உதவியை சீனா வழங்கியுள்ளது.

குறித்த இரு மாகாணங்களுக்கும் தலா 500 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று உதவிப் பொதிகள் சீனாவால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், சீனாவின் தாராளமான இந்த மானியம் இரு நாடுகளும் பல ஆண்டுகளாகப் பேணி வரும் நெருங்கிய உறவுகளுக்குச் சான்றாகும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன, யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மீனவ சமூகங்களுக்கு அரிசிப் பொதிகளை வழங்கும் முதற்கட்ட நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்த வாரத்தில் கட்டப்பட்ட வீட்டு வசதிகளை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் இரண்டு மாகாணங்களில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு வீட்டுத் தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளுக்கு இந்த வீட்டு வசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பரில், சீனா நாடு முழுவதும் 27,000 மீன்பிடி படகுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கியிருந்தது.

கடந்த வருடம் நாடு அனுபவித்த மோசமான பொருளாதார நெருக்கடியின் காரணமாக மீனவ சமூகங்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்தியாவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருந்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.