Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணில்,சஜித் இணைவு ; பொய்யான செய்திகளைப் பரப்பும் அரசியல் வாதிகள்! திரைக்கு பின்னால் அரங்கேறும் நாடகங்கள்.

.

ரணிலுடன் இணையவுள்ளதா சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி; திரைக்கு பின்னால் அரங்கேறும் நாடகங்கள்.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் தலைமையிலான அரசாங்கத்துடன் இணையப்போவதாக வெளியாகும் செய்திகள் முற்றுலுமாக பொய்யானது என கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அரசியல் இலாபங்களை ஈட்டும் நோக்கில் சில அரசியல் கட்சிகள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருவதாக அவர் தெரிவித்தார்.

நாமலின் கருத்து

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் 20 உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இவ்வாறு பதிலளித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 20 உறுப்பினர்கள் இணைந்தால் ஆதரவளிப்போம் என்பதைவிடவுட் கொள்கை ரீதியிலான விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாம் இன்னும் கலந்துரையாடலில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது.

நாங்கள் நபர்களை வைத்து அல்ல. கொள்கைகளை வைத்தே யாருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்பதை தீர்மானிப்போம்.

ஆகவே, கொள்கை ரீதியிலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம் ஏனைய காரணங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடுவோம்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து சிலர் அரசாங்கத்துடன் இணையப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் கூறி வந்தது, ஆகவே அவர்கள் அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார்கள் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

நளிந்த ஜயதிஸ்ஸ

தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைவது தொடர்பான செய்திகள் குறித்து கருத்து வெளியிட்டார்.

‘சஜித் பற்றி தெரியாதவர்கள் அவர்களுடன் அப்போது இணைந்தார்கள். தற்போது தேர்தல் நெருங்கும் போது அவருடைய எண்ணங்களில் வெற்றிடம் இருப்பதை புரிந்து விட்டார்கள்.

தற்போது இருக்கும் தலைவருடன் இருக்க முடியாது என பலரும் உணர்ந்து வருகின்றனர்.

மக்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களால் தீர்மானம் மேற்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.‘ என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகளவு மக்கள் பலம் இருப்பதாக சுயாதீன கணக்கெடுப்புகளில் தெரியவந்துள்ளது.