Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அனுரவின் சுயேட்சையான தேர்தல் கண்காணிப்பு மையம்: இன்று திறந்து வைப்பு

.

ஜேவிபி தலைமையில் தேசிய மக்கள் சக்தி இன்று (26) தனது சுயேட்சையான தேர்தல் கண்காணிப்பு மையத்தை திறக்கவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு மையமாக இது இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் பொலிஸ் திணைக்களத்தின் தேர்தல் அலுவல்கள் பிரிவுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவின் தலைமையில் இது செயற்படுத்தப்படவுள்ளது.

நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற பொலிஸ் குழுவின் தற்போதைய தலைவர் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, இந்த நிலையம் கட்சியால் ஸ்தாபிக்கப்பட்டாலும் சுயாதீனமாக இயங்கும் என தெரிவித்தார்.

25 மாவட்டங்களிலும் காணப்படக்கூடிய தேர்தல் தொடர்பான முறைகேடுகளை இந்த மையம் கண்காணிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.