Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்: உணர்வுபூர்வமாகப் பங்குபற்றிய பெருமளவு மக்கள்.

தமிழினப் படுகொலை எனக் கூறப்படும் 15 ஆவது வருட நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்: உணர்வுபூர்வமாகப் பங்குபற்றிய பெருமளவு மக்கள்.

2009 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது இடம்பெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று சனிக்கிழமை பகல் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உணர்வுபுர்வமாக இடம்பெற்றது.

தமிழினப் படுகொலை எனக் கூறப்படும் 15 ஆவது வருட நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெற்றது. பெருமளவு மக்கள் இதில் கலந்துகொண்டு உயிர்நீத்த தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தினர். பலர் கண்ணீர் சிந்தி அழுதனர்.

இன்று காலை 07.00 மணி முதல் பகல் 09.30 வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளன.

அதேநேரம் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 க்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.

இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டது. பொதுமக்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் உறுப்பினர்களும் மற்றும் சமயத் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் நினைவேந்தல் நிகழ்வில் பங்குபற்றினர்.

யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் பங்குகொண்டதுடன் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இந்த நிகழ்வு வெளியிப்படுத்தியிருந்ததாக அங்குள்ள எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.