முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்: உணர்வுபூர்வமாகப் பங்குபற்றிய பெருமளவு மக்கள்.
தமிழினப் படுகொலை எனக் கூறப்படும் 15 ஆவது வருட நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்: உணர்வுபூர்வமாகப் பங்குபற்றிய பெருமளவு மக்கள்.
தமிழினப் படுகொலை எனக் கூறப்படும் 15 ஆவது வருட நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெற்றது. பெருமளவு மக்கள் இதில் கலந்துகொண்டு உயிர்நீத்த தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தினர். பலர் கண்ணீர் சிந்தி அழுதனர்.
இன்று காலை 07.00 மணி முதல் பகல் 09.30 வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளன.
அதேநேரம் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 க்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டது. பொதுமக்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் உறுப்பினர்களும் மற்றும் சமயத் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் நினைவேந்தல் நிகழ்வில் பங்குபற்றினர்.
யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் பங்குகொண்டதுடன் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இந்த நிகழ்வு வெளியிப்படுத்தியிருந்ததாக அங்குள்ள எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.