Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உருள போகும் இரண்டு தலைகள்: ரணில் – சஜித்தின் நகர்வு.

.

 

நாடாளுமன்ற உறுப்பினரும் சுதந்திர ஜனதா சபையின் தலைவருமான டலஸ் அழகப்பெருமவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக்கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலை வீசியுள்ளார்.

டலஸ் அழகப்பெருமவின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணங்கக் கூடியதாக இருப்பதால் அவரை இணைத்துக்கொள்வது கூட்டணிக்கு பலமாக இருக்கும் என சஜித் கருதுகிறார்.

ஜனாதிபதியை தெரிவுசெய்தவற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சந்தர்ப்பதில் சஜித் தரப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களித்திருந்தது.

அத்தருணத்தில் இருதரப்பினருக்கும் இடையில் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இடம்பெற்றிருந்த போதிலும், பின்னர் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் குறித்த கூட்டணி முறிவுற்றது.

சுதந்திர ஜனதா சபையில் இருந்த பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உருமய ஆகிய கட்சிகள் மவ்பிம ஜனதா கட்சி தலைமையிலான சர்வஜன அதிகாரக் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளதால் டலஸ் அழகப்பெரும சஜித் தரப்புடன் இணையும் எண்ணத்தில் இருப்பதாக தெரியவருகிறது.

ராஜித்த சேனாரட்ன எடுத்துள்ள முடிவு

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதுதொடர்பில் இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. விரைவில் டலஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைய உள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கடந்தகாலங்களில் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்ன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக இதுதொடர்பிலான பேச்சுகளில் இவர் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த நாடாளுமன்ற அமர்வில் ரணில் – சஜித் இணைவு அவசியமென கூறியதும் இந்தப் பின்புலத்தில்தான் என தெரியவருகிறது.

விரைவில் அவர் ரணிலுக்கான ஆதரவை தெரிவிப்பார் எனவும் அறிய முடிகிறது. இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மிக முக்கிய தலைவர்களாக இருக்கும் இருவர் விரைவில் ரணிலுக்கு ஆதரவயிக்க உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜித்த சேனாரட்ன இதில் ஒருவர் என சில உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்தவர் சம்பிக்க ரணவக்க என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்கவுடன் சுமூகமான நட்புறவை தொடர்ந்து ரணில் பேணிவருகிறார். பல சந்தர்ப்பங்களில் இருவரும் ரகசிய பேச்சுகளிலும் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியுடனான உறவில் சம்பிக்க ரணவக்க விரிசலை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.