Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தம்மிக்க பெரேரா: பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்?

.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் உருவாகியுள்ளது.

அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும் அவருக்கு ஆதரவானவர்களும் வர்த்தகர் தம்மிக பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக முன் நிறுத்த வேண்டும் என தொடர்ச்சியாக கட்சிக்குள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தால் வெற்றியின் பின்னர் அவர் பொதுஜன பெரமுனவை ஓரங்கட்டிவிடுவார் என நாமல் தரப்பு சுட்டிக்காட்டி வருவதுடன், தமது கட்சியின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளது.

என்றாலும், ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பராக கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் தம்மிக்க பெரேராவை வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து பசில் ராஜபக்ச கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் நடைபெற்ற சந்திப்பிலும் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தம்மிக்க பெரேரா முன்னிலையில் இருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான பின்புலத்தில் விரைவில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் தீர்மானமிக்க சந்திப்பொன்று இடம்பெற உள்ளதாக அறிய முடிகிறது.

இந்த சந்திப்பின் பின் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பொதுஜன பெரமுன இறுதி நிலைப்பாட்டை தெரிவிக்கும் எனவும் அறிய முடிகிறது.