Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

கொழும்பை மையப்படுத்தி இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்: பெருந்திரளாக கலந்துகொண்ட மக்கள்

.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் நாளைமறுதினம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டதாக கூறியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, அமைதிக்காலத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றி தேர்தலில் வாக்களிக்குமாறும் கோரியுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் பொலிஸாரும், முப்படையினரும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தேர்தல் கடமைகளுக்காக 63ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இறுதி பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

Oruvan

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் இறுதி பிரச்சாரக் கூட்டம் கொழும்பு மருதானை பகுதியில் இடம்பெற்றது.

Oruvan

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்கவின் இறுதி பிரச்சாரக் கூட்டம் நுகேகொடை பகுதியில் இடம்பெற்றதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் பிரச்சாரக் கூட்டம் கெஸ்பேவயில் இடம்பெற்றது.

Oruvan

இதேவேளை, ஏனைய சில ஜனாதிபதி வேட்பாளர்களும் தமது இறுதி பிரச்சாரக் கூட்டத்தை கொழும்பை மையப்படுத்தியே நடத்தியிருந்தனர்.

இன்று நண்பகல் முதல் மௌனக்காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இக்காலப்பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.