Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கண்டியில் கைநழுவிய தமிழ் பிரதிநிதித்துவம்; பெருந்தோட்ட மக்கள் பெரும் கவலையில்

.

கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித் துவம் கைநழுவியுள்ளதாக பெருந்தோட்ட மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

மலையகம் என்றால் பொதுவாக மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களே நினைவுக்கு வரும். அதிலும் குறிப்பாக நுவரெலியா, கண்டி, பதுளை போன்றவை பிரதானமானவையாகும். ஆனால் பொதுவாக மலையகத்தின் தலைநகர் கண்டி என்பர்.

பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களில் இம்முறை தமிழ் பிரதிநிதித்துவம் பெற்றுக் கொள்ளப்பட்டது அல்லது பழைய பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மலையகத்தின் தலைநகர் எனப் போற்றப்படும் கண்டி மாவட்டத்தில் கடந்த 10 வருடங்களாக தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு வந்த போதும் இம்முறை அது கைநழுவியமை கவலையளிப்பதாக பலர் கவலை தெரிவித்தனர்.

கடந்த இரு பாராளுமன்றங்களிலும் வேலுகுமார் கண்டி மாவட்டம் சார்பாக பிரதிநிதித்துவம் செய்தார். அவர் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிச் சின்னங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாகப் போட்டியிட்டபோது அவர் வெற்றி பெற்றிருந்தார். இம் முறை அவர் சிலிண்டர் சின்னத்தில் போட்டி யிட்டு தோல்வியடைந்துள்ளார்.

அதேநேரம் ஐக்கிய மக்கள்சக்தி சார்பாகப் போட்டியிட்ட பாரத் அருள் சாமியும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரபல வேட்பாளர் கலாநிதி பீ.பீ.சிவப்பிரகாசமும் தெரிவு செய்யப்படவில்லை. இன்னும் பல சுயேச்சைக் குழுக்களும், சிறு கட்சிகளும் தமிழ் வேட்பாளர்களை நிறுத்திய போதும் வாக்குகள் சிதறிச் சென்றுள்ளதாகப் பலர் கவலையடைந்துள்ளனர்.