Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தொலைக்காட்சி , வானொலியை கைவிட்ட வேட்பாளர்கள்: சமூக வலைத்தளங்களுக்கு முக்கியத்துவமா?

.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பெரும்பாலான வேட்பாளர்கள் தேசியத் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்களில் தங்களுடைய கொள்கைகளை முன்னிலைப்படுத்த ஒளிபரப்பு நேரத்தை ஒதுக்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என அறியக்கிடைத்துள்ளது.

தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தில் நேற்று வரையில் ஐந்து அல்லது ஆறு வேட்பாளர்கள் மாத்திரமே ஒளிபரப்பு நேரத்தை பெற்று தமது உரைகளை பதிவு செய்துள்ளனர்.

வேட்பாளர்கள் சிலர் ஒளிபரப்பு நேரம் அவசியமில்லை என கூறியுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள 38 வேட்பாளர்களில் 15 பேர் மாத்திரமே பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறான வேட்பாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் முடியாமல் போயுள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.