Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ரணிலின் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்: நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு

.

ரணில் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் 8 பேர் தமது பதவிகளிலிருந்து விலக தயாராகி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என தீர்மானித்துள்ள இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 8 ஆகும்.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காமல் இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் இருப்பது நல்லது அல்ல என அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும் கடந்த நாட்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் குறித்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள இதுவரையில் தீர்மானிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க நேற்று (08) தீர்மானித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தன்னுடைய தனிப்பட்ட காரணத்தினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலில் ஈடுபடும் போது தனிப்பட்ட தீர்மானங்களை முக்கியப்படுத்திக் கொள்ள வேண்டாம் என நாமல் ராஜபக்ச அதன்போது பவித்ரா வன்னியாராச்சியிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.