Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ரணிலின் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்: நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு

.

ரணில் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் 8 பேர் தமது பதவிகளிலிருந்து விலக தயாராகி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என தீர்மானித்துள்ள இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 8 ஆகும்.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காமல் இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் இருப்பது நல்லது அல்ல என அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும் கடந்த நாட்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் குறித்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள இதுவரையில் தீர்மானிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க நேற்று (08) தீர்மானித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தன்னுடைய தனிப்பட்ட காரணத்தினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலில் ஈடுபடும் போது தனிப்பட்ட தீர்மானங்களை முக்கியப்படுத்திக் கொள்ள வேண்டாம் என நாமல் ராஜபக்ச அதன்போது பவித்ரா வன்னியாராச்சியிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.