Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மீண்டுமொரு அரகலய ஆரம்பம்: “நாடாளுமன்ற எரிப்புடனே நிறைவடையும்“

.

 

நாட்டில் நிலவும் வேலைநிறுத்தங்கள் தேசத்தை சீர்குலைக்கும் மீண்டுமொரு அரகலயவின் ஆரம்பமாக இருக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

“இன்று நிலவும் வேலைநிறுத்தங்கள், நாடாளுமன்ற வளாகத்தை எரிப்பதில் நிறைவடையும் நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்கான ஒரு பயிற்சியின் ஆரம்பமாக இருக்கலாம்.

பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவோர் சம்பளத்தை உயர்த்துவதற்கான சாத்தியமற்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

ரயில்வே ஊழியர்கள் மற்றும் பிறர் கோரும் சம்பள உயர்விற்கான நிதியை ஒதுக்குவதற்கு, பெறுமதி சேர் வரி மற்றும் பிற வரிகளை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும்.

சம்பள உயர்வை வழங்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். தயவு செய்து இதுபோன்ற செயற்களில் ஈடுபடாதீர்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

”ரயில்வே ஊழியர்கள் இன்று வேலைக்குத் திரும்பத் தவறினால் அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அவர்கள் பயங்கரவாதத்தை ஏற்று இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விட்டுள்ளனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.