Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலஞ்சம் பெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி கைது; புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை

.

யாழ்ப்பாணத்தில் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளாது உயிரிழந்தவர்களின் சடலங்களை விடுவிக்க, திடீர் மரண விசாரணை அதிகாரிகள் அதிக பணம் வசூலித்து வருவதாக பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சடலத்தை உரிமையாளருக்கு வழங்க 50,000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த ஒருவரின் உறவினர்கள் வழங்கிய முறைபாட்டிற்கமைய பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் போது குறித்த அதிகாரியின் வங்கிக் கணக்கை பரிசீலித்த சந்தர்ப்பத்தில் மோசடியான முறையில் பெற்றுக்கொண்டதாக சந்தேகிக்கப்டும் 25 இலட்சம் ரூபாய் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணி புரியும் அனைத்து மரண பரிசோதனை அதிகாரிகளும் சடலங்களை விடுவிக்க இலஞ்சமாக பணம் பெற்றுக்கொள்வதாக சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மரண விசாரணை அதிகாரியை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.