Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல்!

மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் சுதர்சன் ரெட்டி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 

இந்திய குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் ஜூலை 21 ஆம் தேதி உடல்நலக் குறைவால் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று (ஆகஸ்ட் 20) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது வேட்புமனுவை மாநிலங்களவை செயலாளரும், குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் அலுவலருமான பி.சி.மோடியிடம் தாக்கல் செய்தார்.

இந்தியா கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சுதர்சன் ரெட்டி ஆந்திராவைச் சேர்ந்தவர். ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய இவர், அதன்பிறகு, ஆந்திர மாநில அரசின் தலைமை வழக்கறிஞராகவும், மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

அதன் பிறகு, ஆந்திர உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி வகித்து, பின்னர் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சுமார் 10 ஆண்டுகள் அங்கு பதவி வகித்த இவர், 2007-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற இவர் 4 ஆண்டுகள் அந்த பதவியை வகித்தார். இந்நிலையில் தற்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார். 

முதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா, இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், பின்னர் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்தார்.