Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – சரியான ‘கை’ எது?

.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்று குழுக்களாகப் பிரிந்துள்ளதால், ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் குழுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரிடம் எழுத்து மூலம் விளக்கம் கேட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து அது தொடர்பில் தீர்மானம் ஒன்று கிடைக்கப்பெற்றவுடன், தேர்தல் ஆணைக்குழு முடிவெடுக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக நோக்க வேண்டியது எந்தக் குழுவினரை என்ற ஒரு கேள்வி எழுந்தமையினால் சட்ட மா அதிபரின் பரிந்துரைகளை கேட்டறிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரபால சிறிசேன தலைமையிலான குழு, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான குழு என மூன்று குழுக்கள் உண்டு.

ஸ்ரீலங்கா சுதந்திர் கட்சியின் மைத்திரிபாலவின் குழு ஜனாதிபதி தேர்தலுக்கு வேறொரு வேட்பாளரை முன்னிலைப்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் குழு தமது ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

அமைச்சர் தயாசிறி ஜயசேகர குழு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரிபாலவின் குழு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவையே ஜனாதிபதி வேட்பாளராக முன்வைத்துள்ளது.

கட்சி ஸ்தாபகரின் மகளான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அமைதியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.