Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழீழம் சாத்தியப்படுமானால் தமிழில் ஒரு ஜனாதிபதி சாத்தியம்.

இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேகமான நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழீழம் சாத்தியப்படுமானால் தமிழில் ஒரு ஜனாதிபதி சாத்தியம்.

தமிழீழம் சாத்தியப்படுமானால் தமிழில் ஒரு ஜனாதிபதி சாத்தியம். பராக் ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாவார் என அதாவது ஜனாதிபதி ஆவதற்கு 10 வருடங்களுக்கு முன்னரே கூறி இருந்தால் அனைவரும் சிரித்திருப்பார்கள். ஆனால் அது நடந்தது.

மேலும், இலங்கையின் அரசியல் சூழலை பார்க்கும் பொழுது அது அவ்வளவு எளிமையான விடயமாக நான் பார்க்கவில்லை என்கிறார் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்.

இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேகமான நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து, “புவிசார் அரசியல் போட்டி நிலவி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் யுக்ரைன் மற்றம் ரஷ்ய மோதல் – இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன மோதல் என்பவற்றின் அடிப்படையில் இவை மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா என்று பார்க்கும் நேரத்தில் மேற்குலக நாடுகளுக்கு எதிரி நாடாக காணப்படும் ஈரான் நாட்டு ஜனாதிபதியை இலங்கைக்கு அழைத்துவந்தமைக்கான காரணம் என்னவென கருதுகின்றீர்கள்” என வினவிய போது,

இலங்கையின் நிலைப்பாடானது, எல்லா நாடுகளுடனும் எங்களுக்கு நட்புறவான ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்பதே. இதை எமது ஜனாதிபதியும் இதே நோக்கத்தையே கொண்டிருக்கின்றார்.

இதனடிப்படையில் தான் ஈரான் ஜனாதிபதியும் இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பாக இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதன்மூலம் பல ஆயிரம் கணக்கானவர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பை பெற்றக்கொள்ளும் சந்தர்ப்பமாக அது அமையும்.

மேலும் இலங்கையின் சர்வதேசத்தை கையாளும் ஒரு வெளிவிகார கொள்கையை பற்றித்தான் இவை அனைத்தையும் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்