Breaking News
வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம்!
கொழும்பில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த இலங்கைத் தாய்..!
வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம்:
கொழும்பில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த இலங்கைத் தாய்..!
தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் ஆறு குழந்தைகளை இளம் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
31 வயதான இலங்கைத் தாய் ஒருவர் மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகளென ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேராசிரியர் டிரான் டயஸின் பராமரிப்பில், அதிகாலை 12:16 முதல் 12:18 வரை இரண்டு நிமிடங்களுக்குள் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன.
தாய் மற்றும் பிறந்த ஆறு குழந்தைகளும் நல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


