Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றியடைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

“அநுராவை ஜனாதிபதியாக்க விரும்பும் ரணில்”

“அநுராவை ஜனாதிபதியாக்க விரும்பும் ரணில்”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றியடைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றாகத் தெரியும் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் அநுர திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாடு சீர்குலையும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிந்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கியது போன்று, மக்கள் போராட்டத்தின் மூலம் சில சக்திகள் அநுர திஸாநாயக்கவை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்ற தயாராகும்.

ஜனாதிபதியாக அநுர திஸாநாயக்க தோல்வியடைந்ததன் பின்னர் ரணில் விக்ரமசிங்க எவ்வாறு நாட்டை மீட்டெடுத்தார் என்பதை மக்களுக்கு உணர்த்தும் செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைவாக ரணில் விக்கிரமசிங்கவே இந்த நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவுசெய்யப்படுவார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் இந்த செயற்பாடுகள் நடக்காது என்பது ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றாக தெரியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.