Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தினாலும் திருப்தியடைய முடியாது.

ஜனாதிபதியிடம் திறமையான அணி இல்லை

ரணில் அரசாங்கத்தில் திருப்தியில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தினாலும் திருப்தியடைய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

உண்மையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய சிறந்த குழு ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியிடம் திறமையான அணி இல்லை என தெரிவித்த உறுப்பினர், எதிர்வரும் தேர்தலில் நாட்டை அபிவிருத்தி செய்யும் குழுவுடன் ஒன்றிணைய வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மன்னப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மழை பெய்தால் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறிய அரசாங்கம் தற்போது செவிடாகவும் ஊமையாகவும் மாறியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நீர் மின் உற்பத்தியின் பயனை மக்களுக்கு வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் புதிய சித்தாந்தம் காணப்படுவதாகவும், அது எவ்வாறான தேர்தல் என்பது குறித்து நாட்டிற்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு கோருவதற்காகவே பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ளதாகவும் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டு மக்களை வாழ வைக்காமல் அவர்களின் சொந்த நலனுக்காக செயற்படுகின்றது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது எனவும் தெரிவித்தார்

இலவசக் கல்வி, சுகாதாரம் இரண்டும் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், அரச பல்கலைக்கழகப் பாடசாலைகள் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், தனியார் பல்கலைக்கழகங்களும் வைத்தியசாலைகளும் சிறப்பாகச் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மன்னப்பெரும தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.