Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சுயாதீன வேட்பாளராக போட்டியிடுகிறாரா ரணில்?

.

இலங்கைத்தீவில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக புதிய ஒரு அடையாளத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் “திவயின” சிங்கள நாளிதழுக்கு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது காணப்படுவது அரசியல் பிரச்சினை அல்ல, பொருளாதார பிரச்சினை எனவும், அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க சிலரால் முடிந்தாலும், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நாட்டில் உள்ள ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க எனவும் அவர் தெரிவித்தார்.

வீழந்து கிடந்த நாட்டை ஒரு அளவுக்கு கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டு செல்ல ஜனாதிபதி நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும் பொதுமக்கள் அதனை புரிந்துக்கொண்டு தற்போதைய ஜனாதிபதியையே வருங்கால ஜனாதிபதியாக பதவி வகிப்பதில் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்த அவர் பொதுமக்கள் தவறான ஒர தீர்மானத்தை எடுத்து நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் வீழ்நத பின்னர் வருத்தப்படுவதில் பயனில்லை என வலியுறுத்தினார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஒரு சிலர் தயாராக இருந்தாலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வழிமுறைகள் அறிந்த ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே எனவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் என்பது பெரும்பான்மையான கருத்தாகும், எனினும் இது தொடர்பில் பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரயவசம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.