Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“13” பிளஸ் என்றால் என்ன?: சிங்கள மக்களுக்கு சஜித் தெளிவுபடுத்த வேண்டும்

.

13 பிளஸ் தொடர்பாக தமிழரசு கட்சியும் சஜித் பிரேமதாசவும் தமிழ், சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இனப் பிரச்சினைக்கான தீர்வாக 13 பிளஸ் ஐ தருவதாக எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்திருப்பதாக கடந்த திங்கட்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தில் அவரின் முன்பாக தமிழரசு கட்சி பிரதிநிதி ஒருவர் கூறினார்.

இதனை அதே மேடையில் இருந்த சஜித் பிரேமதாசவும் நிராகரிக்கவில்லை. நான் ஒரு தமிழன் என்ற வகையில் இதனை வரவேற்கின்றேன்.

ஆனால், சஜித் பிரேமதச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை குறிப்பிடவில்லை. ஆகவே, சஜித் பிரேமதச தமிழரசு கட்சியுடன் செய்துகொண்டுள்ள ஒரு இரகசிய உடன்படிக்கையின் பிரகாரமாகவே இந்த உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டிருந்திருக்கலாம்.

ஆனால், 13 பிளஸ் என்பது எல்லையற்றது. ஆகவே, இந்த பிளஸ் தமிழீழம் வரையா அல்லது சமஷ்டி வரையா என்ற அதன் எல்லையற்ற தன்மையை சஜித் பிரேமதாச தெளிவுபடுத்த வேண்டும். சிங்கள மக்களுக்கு முன்பாக அவர் மேடையில் இதனை குறிப்பிடவேண்டும்.

அவ்வாறு அவர் இதனை சிங்கள மக்களுக்கு முன்பாக உறுதிப்படுத்துமிடத்து தமிழ் மக்களின் நன்மை கருதி நானும் சஜித் பிரேமதச அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.” என்றார்.