Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

20 பேருக்கு தேர்தலில் ஈடுபாடு இல்லை!: முன்னாள் ஜனாதிபதிகள் மூவரும் உள்ளடக்கம்!

.

முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 20 பேர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமலிருக்க தீர்மானித்துள்ளனர்.

அவர்களுள் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரபால சிறிசேன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறு தீர்மானித்தவர்களுள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் கிரிஎல்ல, ஷான் விஜயலால் த சில்வா, விமல் வீரவங்ச, பந்துல குணவர்தன, விஜயதாஸ ராஜபக்ச, விமல வீர திஸாநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், டப்ள்யூ டீ ஜே செனவிரத்ன, காமினீ லொகுகே, மகிந்த யாப்பா அபேவர்தன, சீ.வீ. விக்னேஷ்வரன், வாசுதேவ நாணயக்கார, கெவிந்து குமாரதுங்க, ஷெஹான் சேமசிங்க, எஸ் பீ. திஸாநாயக்க, கனக ஹேரத் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன் செயற்பட்ட கரு ஜயசூரிய, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, அகில விராஜ் காரியவசம், ரஞ்சித் அலுவிகாரே, நவீன் திஸாநாயக்க ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

நிதி நெருக்கடி காரணமாக தாம் இம்முறை போட்டியிடவில்லை என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தாம் கட்சியாகவோ, கூட்டணியாகவோ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என உறுதிப்படுத்தியிருந்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படித்த மற்றும் இளைஞர் சமுதாயத்திற்கு வாய்ப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வீ. விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுள் பல புதிய முகங்களை காணக்கூடியதாக இருக்கும் என அரசியல் அவதானிகள் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.