Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஐ.தே.க. உருவாக்கும் கூட்டணியில் ஒருபோதும் இணையப் போவதில்லை

.

ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கும் கூட்டணியில் ஒருபோதும் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற அக்கட்சியின் உயர் அரசியல் பீடத்தின் முக்கிய பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பிலான அனைத்து மட்ட அரசியல் நடவடிக்கைகளையும் கட்சி திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சியின் தலைவர் என்ற வகையில் பொதுஜன பெரமுன கட்சியை பிரபலமான கட்சியாக கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களை வெற்றி கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கட்சியின் முக்கியஸ்தர்களை கேட்டுக் கொண்டார்.