Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வெற்றி பெறும் வேட்பாளர் தகுதி நீக்கப்படுவது உறுதி: விளக்கம் கூறும் முன்னாள் நீதியமைச்சர்

.

வெற்றி பெறும் வேட்பாளர் தகுதி நீக்கப்படுவது உறுதி: விளக்கம் கூறும் முன்னாள் நீதியமைச்சர்

தேர்தலில் வெற்றிபெறும் பிரதான வேட்பாளர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வை இலஞ்சமாக கருதி வாக்குறுதியளித்ததன் காரணமாக வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்.

மேலும் கருத்து தெரிவித்த விஜயதாச,

“இந்த முக்கிய வேட்பாளர்கள் அனைவரும், அரச ஊழியர்களின் சம்பளம் 25000, 20000 மற்றும் 10000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என வாக்குறுதியளிக்கின்றனர்.

எனவே அரிசி மூடைகள் மற்றும் பிரியாணி விநியோகம் மூலம் வாக்காளர்களை கவர்வது ஜனாதிபதி பதவியை தகுதி நீக்கம் செய்வதற்கு போதுமான குற்றமாகும், அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை உறுதியளிப்பதும் லஞ்சமாகும்.

எனவே, எந்த பிரதான வேட்பாளர் வெற்றி பெற்றாலும் தேர்தல் மீறல் மனுக்களால் தகுதி நீக்கம் செய்யப்படுவார். ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் செலவுகள் தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

சில வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய அறிவிப்பு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தேவையான விசாரணைகளை ஆரம்பிக்கும். இறுதியில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என” அவர் மேலும் தெரிவித்தார்.