Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பின்லேடன் மகன் உயிருடன் இருக்கிறார்; மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் அல்கொய்தா?

.

கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறார் என திடுக் தகவல் வெளியாகியுள்ளது.

2001-ம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன். அமெரிக்க படையால் தேடப்பட்டு வந்த நிலையில், 2011ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் கிராமம் ஒன்றில் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் அமெரிக்காவின் ‛‛கடற்படை சீல்ஸ்” தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டுக்கொன்று உடலை கடலில் வீசியது.

இந்த வீடு பின்லேடனின் மூன்றாவது மனைவியின் மகனான ஹம்சா பின்லேடனின் வீடு எனவும், ஒசாமா பின்லேடன் சுட்டுகொல்லப்பட்ட போது ஹம்சா பின்லேடன் அங்கு இல்லை. எனவும். 2019-ம் ஆண்டு ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்தது.

இதனை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை. இதனால் முரணாக ஊடகங்களில் செய்தி வெளி வந்தன. எனினும் ஹம்ஸா பின்லேடனை உலகளாவிய பயங்கரவாதியாக வகைப்படுத்தியது அமெரிக்கா.

இந்நிலையில் ‛‛தி மிர்ரர் ‘ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறார் என ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் எதிர்ப்பு இராணுவ அமைப்பான என்.எம்.எப். என்ற அமைப்பு தெரிவிக்கிறது என அவை (தி மிர்ரர்) கூறி உள்ளது.

2021 ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றிய போது ‘பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கான பயிற்சி மையம் அமைத்து 450 பாகிஸ்தானியர்கள் ஹம்சா பின்லேடனுக்கு பாதுகாப்பு அரணமாக இருந்து வருகின்றனர். அவரது கட்டளையின் கீழ், அல் கொய்தா மீண்டும் ஒருங்கிணைத்து வரும் காலங்களில் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல்களுக்கு தயாராகி வருகிறது’ .

மேலும் ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல் கொய்தா விவகாரங்களை கவனித்து வரும் அய்மன் அல்-ஜவாஹிரியுடன் ஹம்சா பின்லேடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.