Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பார் குமார்…. குடு திகா….: தொலைக்காட்சி விவாதத்தில் அடித்துக்கொண்ட தமிழ் எம்.பிகள்

.

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைகலப்பில் ஈடுபட்ட காணொளி தற்போது சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது.

பிரபல தமிழ் தொலைக்காச்சியில் ஒளிபரப்பாகவிருந்த அரசியல் நிகழ்ச்சியின் பதிவின் போது, ​​ நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலு குமார் இடையே வாக்குவாதம் முற்றியது.

ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதன்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ஒருங்கிணைப்பாளர்களும் தலையிட்டு இருவரையும் கட்டுப்படுத்தினர்.

இந்த விவாதத்தின் போது திகாம்பரம் எம்.பி, வேலுகுமார் எம்.பியை பார் குமார் என்று திட்டினார்.

பதிலுக்கு வேலுகுமார் எம்.பி, குடு திகா என்று திட்டினார். இதனால் இருவருக்கு வாக்குவாதம் முற்றியது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வெளியேற்றப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை வெளிப்படுத்தினார்.