Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கை முழுவதும் மக்களை சந்திக்கும் நாமல்: ரணிலுக்கு பொதுஜன பெரமுன வாய்ப்பளிக்குமா?

.

 

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக அதிகாரம் எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்க உள்ளது.

தேர்தலை ஒத்திவைப்பதற்கான சில குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட இறுதி முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து இன்று திங்கட்கிழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் தேர்தல் 100 வீதம் நடைபெறும் சூழ்நிலை உதயமாகியுள்ளது.

இதனால் அனைத்துக் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுகளை இறுதிப்படுத்தியுள்ளதுடன், தேர்தல் பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன ஏற்கனவே பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதை தவிர்த்துவந்த நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் பிரசாரங்களில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளதால் காலத்தாமதத்தை ஏற்படுத்தாது தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவும் அக்கட்சி ஆலோசனைகள நடத்தியுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் நாடு முழுவதும் 14ஆயிரத்துக்கும் அதிகமான கிராம சேவகர் பிரிவுகளை மையப்படுத்திய பொதுக் கூட்டங்களை நடத்த அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், முக்கிய கூட்டங்களில் நாமல் ராஜபக்ச கலந்துகொண்டு மக்கள் ஆதரவை கோர உள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான அறிவிப்பை விரைவில் வெளியிட் அக்கட்சி தீர்மானித்துள்ளது. அரசியல் மேடைகளில் பல்வேறு கருத்துகளை பொதுஜன பெரமுன வெளிப்படுத்தி வந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதே கட்சியின் இறுதி முடிவாக இருக்கும் என அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.