Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தபால்மூல வாக்களிப்பில் 21 மாவட்டங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

தேர்தல் பிரச்சாரங்கள்.

பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்கு முடிவுகளில் தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம் மேலோங்கி காணப்பட்டது.

22 தேர்தல் மாவட்டங்களில் 21ஐ தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே தேசிய மக்கள் சக்தி இரண்டாமிடத்தைப் பெற்றது.

இங்கு தபால்மூல வாக்கு முடிவுகளுக்கு அமைவாக இலங்கை தமிழரசுக் கட்சி 5236 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைக் கைப்பற்றியது.

தேசிய மக்கள் சக்தி 3412 வாக்குகளுடன் இரண்டாமிடத்தையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 1383 வாக்குகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றன.

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது. பெரும்பாலான மாவட்டங்களில் 78 வீதத்திற்கும் அதிகமான மக்கள் 

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.