Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட நித்யானந்தாவின் சீடர்கள்.. காரணம் என்ன?

,

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள அமேசான் காட்டில், பழங்குடியினரின் பல ஏக்கர் நிலத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு நித்யானந்தா ஒப்பந்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. 

பொலிவியாவில் பழங்குடியினர் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி, நித்யானந்தாவின் சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் வழக்குகளில் சிக்கிய சாமியார் நித்யானந்தா, இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். ஈக்வடார் நாட்டில் உள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு, தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில், தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள அமேசான் காட்டில், பழங்குடியினரின் பல ஏக்கர் நிலத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு நித்யானந்தா ஒப்பந்தம் போட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கு சென்ற நித்யானந்தா சீடர்கள், ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டு உள்ளனர். இதனை அறிந்த பொலிவியா அரசு, பழங்குடியின மக்களின் நிலத்தை நித்யானந்தா அபகரிக்க முயன்றதாகக் கூறி, ஒப்பந்தம் செல்லாது என அறிவித்தது. மேலும், அங்கு தங்கி இருந்த நித்யானந்தா சீடர்கள் 20 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.