Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியவர்; மனநிலம் பாதிக்கப்பட்டவர்!

.

கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவன முகாமையாளருக்கு போலியான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை, நீர்கொழும்பு குற்றவியல் பிரிவின் அறிவுறுத்தலுக்கமைய வாரியபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் கடந்த 27ஆம் திகதி தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் உள்ளதாக கூறினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஆராயும் போது அந்த தகவல் போலியானது என தெரிய வந்த பின்னர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, நீர்கொழும்பு குற்றவியல் பிரிவு விசாரணைகளை நடத்தி, அழைப்பை மேற்கொண்ட தொலைபேசியின் உரிமையாளரை அடையாளம் கண்டுள்ளனர்.

அதனைத் தொடர்நது, வாரியபொல பொலிஸாருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தனக்கு தோன்றியமையால் அவ்வாறான ஒரு அழைப்பை மேற்கொண்டதாக விசாரணைகளின் போது சந்தேகநபர் கூறியுள்ளார்.

மேலும், சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.