Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

அனுரவின் தேர்தல் அலுவலகம் தீ வைப்பு: முறைப்பாடுகள் ஆயிரத்தை கடந்தது

.

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மீரிகம பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் மாற்று கட்சியினரால் தீ வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த அலுவலகத்தை சேதப்படுத்தியுள்ளதாக இந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மீரிகம பொலிஸில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் 23 நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் நாட்டில் தேர்தல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.

இதுவரை 1155 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.