Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வெடி குண்டு அச்சுறுத்தல் - பாதுகாப்பாக ரோமுக்கு அழைத்து செல்லப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ்!

.

நியூயோர்க்கில் இருந்து டெல்லி நோக்கி பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் பாதுகாப்புக் காரணத்தால் நேற்று (23) ரோம் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது.

வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸின் போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் ரோம் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல்களின் படி, விமானம் காஸ்பியன் கடலுக்கு மேல் இருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் குறித்து பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து இத்தாலிய விமானப்படை போர் விமானங்கள், விமானத்தை ரோம் நகருக்கு அழைத்துச் சென்றன, அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று இத்தாலிய தலைநகரில் உள்ள அதிகாரிகள் ஏபிசி செய்தியிடம் தெரிவித்தனர்.

199 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் பயணித்த விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோமின் லியோனார்டோ டா வின்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

சட்ட அமுலாக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் பின்னர் விமானம் 15 மணிநேர தாமதமாக டெல்லி நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

விமானம் டெல்லியில் தரையிறங்குவதற்கு முன் நெறிமுறையின்படி ஒரு ஆய்வுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.