Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளினால் திருகோணமலை நகர் பகுதியில் விசேட சோதனை!

.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளினால் நேற்று (07) திருகோணமலை நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

திருகோணமலை நகரை அண்டிய பகுதிகளான பொதுச்சந்தைகள், அங்காடி வியாபார நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்கு மாகாண அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. விக்னேஷ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது, பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் பாவனைக்கு உதவாத தராசுகள், முத்திரையிடப்படாத நிலுவை அளவீட்டுக் கருவிகள் போன்றவற்றை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.