Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் – 38 தடவைகள் தாக்கினார் விலை போகவில்லை!

.

தமிழரசுக் கட்சியால் சிதைக்கப்பட்ட தமிழ் தேசியத்தை மீள உருவாக்குவதில் ஜனாதிபதி சட்டத்தரணி கேவி தவராசா தலைமையில் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் என சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கால் கந்தர் மடப்பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதிகளிடம் பெற்ற கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வுகள் கலந்து கொண்டு உரையாற்றும் பது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நாங்கள் தமிழரசு கட்சியிலிருந்து ஏன் விலகினோம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் அதை பற்றி நான் இங்கு கூற விரும்பவில்லை.

நாங்கள் தற்போது சனநாயக தமிழரசு கூட்டமைப்பாக மாம்பழ சின்னத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கேவி தவராசா தலைமையில் களமிறங்கி உள்ள நிலையில் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்கி வருகிறார்கள்.

நான் ஒரு வேட்பாளராக மாம்பழ சின்னத்தில் போட்டியிடுகிறேன் தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களுக்கான ஒரு கூட்டமைப்பாக நாங்கள் செயல்படுகிறோம்.

நான் ஒரு ஊடகத்துறையை நடத்தி வர நிலையில் 38 தடவைகள் தாக்குதலை மேற்கொண்டார்கள் இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த ஜனாதிபதிகளிடம் கூறினேன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வெளிநாட்டு தூதரகங்களுக்கு கூறினேன் சர்வதேச நிறுவனங்களுக்கு கூறினேன் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் தமிழ் தேசியத்திற்காக பயணிப்பவர்கள் பல்வேறு தடைகளை சந்திப்பது வழமையான செயல்பாடு ஆனால் நானும் என் சாந்த நிறுவனமும் பல்வேறு தடவைகள் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்படுவதும் தொடர் செயற்பாடாக இருந்து வருகிறது.

தமிழ் தேசியத்திற்காக பயணிப்பவர்கள் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் காணாமல் ஆக்கப்படுவதும் இலங்கையில் சாதாரணமான ஒரு விடயமாக நடந்து வந்த நிலையில் இதுவரை எந்த ஒரு விசாரணை முடிவுகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் தருவதாக அமையவில்லை.

தமிழ் மக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும் தமிழ் தேசியத்தை விலைபேசி விற்பதற்கு பல்வேறு தரப்புக்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் .

தமிழ் மக்கள் அவர்களிடமிருந்து விடக் கூடாது தமிழ் தேசியத்தை உண்மையாக நேசிப்பவர்கள் அதற்காக போராடுபவர்களையும் மக்கள் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

நான் சென்ற தடவை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது வட்டுக்கோட்டை தொகுதிக்கு முன்னுரிமை கொடுத்து சுமார் 600 மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு இருக்கிறேன்.

அவற்றோடு நின்றுவிடாமல் ஏனைய தொகுதிகளுக்கும் என்னால் இயன்றவரை அபிவிருத்திகளை கொண்டு சென்றிருக்கிறேன்.

நான் அந்த தொகுதிகளுக்கு செல்லும்போது மக்கள் கூறினார்கள் நீங்கள் எந்த கட்சியில் கேட்டாலும் உங்கள் சிறப்பான சேவைக்கு நமது ஆதரவு இருக்கும் என்று.

நாங்கள் தமிழ் தேசியத்தை விலை பேசி விற்றவர்கள் அல்ல விக்கப் போவார்கள் அல்ல அது மக்களுக்கு நாங்க தெரியும்.

ஆகவே தமிழ் மக்கள் மாவீரர் நாளில் தமது வரலாற்றுக் கடமைகளில் ஒன்றாக தமிழ் தேசியம் சார்ந்தவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.