Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வட, கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவில் சுமார் 40 இலட்சம் மிதக்கும் வாக்குகள்: ஆய்வில் தகவல்

.

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் காணப்படக்கூடிய வாக்காளர்களில் சுமார் 40 இலட்சத்துக்கும் அதிகமானோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது யாருக்கு என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கத்தின் உளவுத்துறை நடத்திய ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக “லங்காதீப” என்ற சிங்கள நாளிதழின் ஞாயிறு வார இதழில் செய்தி வெளியாகியுள்ளது.

அரசாங்க உளவுத்துறை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், கடந்த தினங்களில் இரகசியமாக வீட்டிற்கு வீடு சென்று நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அநேகமானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை வழங்கும் வேட்பாளரை இறுதி இரு வாரங்களிலேயே தீர்மானிப்பதாக அங்கு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிலவும் அரசியல் சூழல், வேட்பாளர்களின் பிரசித்தம், நாட்டை கட்டியெழுப்பக்கூடிய திறமை, கொள்கை போன்ற காரணங்கள் அனைத்தையும் பரிசீலித்து அதன் பின்னர் தாம் வாக்களிக்கும் வேட்பாளரை தெரிவு செய்வதாக குறித்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களுள் 30 வீதத்துக்கும் அதிகமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் தங்களுடைய முதலாவது வாக்கை வழங்க தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 20 இலட்சமான இளைஞர்கள் வெளிநாடுகளில் வாழும் நிலையில் அவர்களுள் அதிகமானோருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்காது என தெரியவந்துள்ளது.