Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அவண்ட் கார்ட் நிறுவனத்துக்கு ஆப்பு! அனுரகுமார அதிரடி!

,

அவண்ட் கார்ட் நிறுவனத்துக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிரடி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவான ஓய்வுபெற்ற மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு சேவை நிறுவனவே அவண்ட் கார்ட ஆகும்.
இது உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பை வழங்கி வருகின்றது.
முன்னதாக சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பு வழங்கும் செயற்பாடு இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட போதும், கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் அதனை அவண்ட் கார்ட் நிறுவனத்துக்குக் கையளித்திருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் அவண்ட் கார்ட் நிறுவனத்துக்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பு வழங்கும் உரிமை அவண்ட் கார்ட் நிறுவனத்திடம் இருந்து ரத்துச் செய்யப்பட்டு, இன்று தொடக்கம் மீண்டும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.