Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ் தேசியத்தின் இருப்பினை பாதுகாக்க தமிழ்தேசிய மக்கள் முன்னணியை பலப்படுத்த வேண்டும்!

தமிழரசுக் கட்சியின் முக்கிய நபரின் சர்வாதிகார போக்கினால் தமிழரசுக் கட்சியில் இருந்து பலர் வெளியேற்றப்படுகின்றனர்.

தமிழ் தேசியத்தின் இருப்பினை பாதுகாக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியை பலப்படுத்த வேண்டும் அதற்கே எமது ஆதரவு என தமிழரசுக் கட்சியின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்...
நேற்றைய தினம் ஊடகங்கள் முன் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போது எம் தேசத்தில் இருந்து சிங்கள தேசியக் கட்சிகளை விரட்டவேண்டும், குறிப்பாக NPP யை தோற்றடிக்கப்பட வேண்டும், இதற்காக நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலம் இது, இன்று தமிழரசுக் கட்சி தனிநபரினால் எதேச்சதிகாரமாக செயற்படுத்தப்படுவதனால் எமக்கிடையே ஒற்றுமையையும் ஏற்படுத்தாது பிரித்தாளும் தந்திரத்தினை கொழும்பில் இருந்து தமிழரசுக் கட்சிக்குள் புகுந்த தமிழரசுக் கட்சியின் முக்கிய நபரின் சர்வாதிகார போக்கினால் தமிழரசுக் கட்சியில் இருந்து பலர் வெளியேற்றப் படுகின்றனர்/ விலகி செல்கின்றனர். ஆதலினால் தமிழ்தேசியக் கொள்கையில் இருந்து இம்மியளவும் விலகாது ஒற்றுமைக்காக செயற்படும் கஜேந்திரகுமார் அணியினை தமிழ் தேசம் பலப்படுத்த வேண்டிய தேவை இன்று வந்துள்ளது, அந்த வரலாற்றுக் கடமையை உணர்ந்து எமது பூரண ஆதரவினையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கி எம்மால் ஆன சகல உதவிகளையும் வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.. தமிழ்தேசிய அரசியலிலும் மாற்றத்தின் தேவை உணரப்படுகிறது