Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் இந்திய முதலீட்டில் மத்திய கடல்வள ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சியை கண்டிப்பதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் தெரிவித்திருக்கின்றது.

யாழ் தீவு பகுதிகள் இந்தியா வசமாகிறது.

யாழ் தீவு பகுதிகள் இந்தியா வசமாகிறது.

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் இந்திய முதலீட்டில் மத்திய கடல்வள ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சியை கண்டிப்பதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் தெரிவித்திருக்கின்றது.

அண்மையில் நடைபெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மண்டைதீவில்
இந்தியாவினால் மத்திய கடல்வள ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தலா 10 ஏக்கர் வீதம் இரு காணிகள் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர். கலந்துரையாடலின் நிறைவில் இணையத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையில் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அதற்கு ஒரு தீர்வினை காணாமல் எங்களுடைய வளங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. மேலும் அண்மையில் தீவகத்தி ல் குறிப்பாக அனலைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு ஆகியவற்றில் மீள் புதப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்களுக்கான பூமி பூசை இடம்பெற்றிருந்தது.

அதன் அடுத்த கட்டமாக மண்டைதீவில் கடல்வள ஆய்வு மையம் திறப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக கடற்றொழில் அமைச்சரே கூறுகிறார். இது உண்மையிலேயே பாரதூரமான விடயமாகும். எங்களுடைய கடல்வளத்தையும், அதுசார்ந்த நிலத்தையும் எவருக்கும் விற்பனை செய்யகூடாது.

அவற்றில் எங்களின் ஆதிக்கம் குறைவடைந்தால் மிகவும் பாரதூரமான நிலையேற்படும். இதனை நாங்கள் எதிர்க்கிறோம் எனவும் கூறியுள்ளனர்.