Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழரசை உடைப்பவர்களுக்கு 'தமிழரசு' என்ற சொல் தேவைப்படுகிறது - சி.வீ.கே சிவஞானம்.

தமிழரசு கட்சி உருவாக்கம். எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவரைத் தவிர ஆறு பேரும் அதற்க்கு ஆதரவு.

தமிழரசை உடைப்பவர்களுக்கு 'தமிழரசு' என்ற சொல் தேவைப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் , இரண்டு தினங்களுக்கு முன்பதாக சில ஊடகங்களில் புதிய தமிழரசு கட்சி உருவாக்கம் என்றும் அதற்கு கல்விமான்கள், இந்தியாவில் இருக்கின்ற தமிழ் தேசியவாதிகள், புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் இணைந்து புதியதோர்தமிழரசுக் கட்சியை உருவாக்குவதாகவும் அதில் முக்கியமாக தமிழரசு கட்சியின் எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவரைத் தவிர ஆறு பேரும் அதற்க்கு ஆதரவு என்ற வகையிலும் கட்சியை பிளவு படுத்துகின்ற வகையிலும் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நான் நேரடியாக தொலைபேசியில் பேசி இருந்தேன். அவர்களுக்கு இது தொடர்பாக எது விதமான எண்ணங்களும் கிடையாது. இலங்கை தமிழ் மக்களுக்காக இருக்கின்ற ஒரே ஒரு பாரம்பரிய கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி அதனை எப்படியாவது உடைத்து விட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடு செய்யப்பட்ட புனையப்பட்ட ஒரு விஷமத்தனமான செய்தி இது. 

தமிழரசு கட்சியை பொறுத்த வரையில் அதன் 75 வருட கால வரலாற்றில் சோரம் போகாத பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி தமிழரசுக் கட்சி. ஊழலில் ஈடுபடாதவர்கள் இருக்கின்ற கட்சி தமிழரசு கட்சி. 

தமிழரசு என்றும் புதிய தமிழரசு என்றும் புதிய கட்சிகளை உருவாக்குவோர்களுக்கு தமிழரசு என்ற சொற்பதம் தேவைப்படுகிறது.

தமிழரசுக்கட்சியை உடைப்பவர்களுக்கு தமிழரசு என்ற சொல் தேவைப்படுகிறது. இந்த முயற்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் தெற்கின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறோம் என்பதை தெரிந்து வைத்துள்ளார்களோ தெரியாது எனத் தெரிவித்தார்.