யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி -12. 1894 பெப்ரவரி 3 - யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.
.
.png)
புகையிலை உச்சக்கட்ட உற்பத்தி 1880-1900
19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் திருவிதாங்கூர் அரசின் தனியுரிமைக் கொள்கை கைவிடப்பட்டதால் புகையிலை ஏற்றுமதி அதிகரித்து, உற்பத்தியிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசு புகையிலை மீது இறக்குமதி வரியை மட்டும் அறவிட்டது. 1880- 1900 காலப்பகுதி யாழ்ப்பாணத்தில் புகையிலை உற்பத்தியின் உச்சக்கட்டமாக அமைந்தது. யாழ்ப்பாணத்தில் புகையிலைச் செய்கையின் கீழ் இருந்த நிலப்பரப்பின் அளவு அதிகரித்தது. இக்காலத்தின் ஏற்றுமதி பற்றிய புள்ளிவிபரங்கள் புகையிலை உற்பத்தியின் முன்னேற்றத்தை எடுத்துக் கூறுகின்றன. இக்காலத்தில் ஏற்பட்டிருந்த உச்ச நிலையை 20 ஆம் நூற்றாண்டில் எட்ட முடியவில்லை. 1896 ஆம் ஆண்டில் 10244752 இறாத்தல் புகையிலை ஏற்றுமதியாயிற்று. இதுவே எந்தவொரு ஆண்டிலும் எட்டப்படாத உயர் அளவாக இருந்தது. இவ்வாண்டின் தொகைக்குக் கிட்டிய உயர் ஏற்றுமதி 1875 இல் அடையப் பெற்றிருந்தது. அவ்வாண்டில் 10188528 இறாத்தல் புகையிலை ஏற்றுமதியாயிற்று. 1896 ஆம் ஆண்டின் புகையிலை ஏற்றுமதி வருமானம் ரூபா 1918950 ஆகும். 1880-1900 ஆண்டு காலத்தில் ஆண்டு ஒன்றுக்குரிய ஏற்றுமதி 74 மில்லியன் இறாத்தலுக்கு மேற்பட்டதாகவே இருந்தது. ஏற்றுமதி வருமானமும் ஆண்டுக்கு ரூ.1400000 முதல் ரூ. 1900000 வரையில் உயர் நிலையில் இருந்தது. யாழ்ப்பாணத்தின் புகையிலை உற்பத்தி யாளர்களான விவசாயிகளின் கொள்வனவு சக்தி இக்காலத்தில் அதிகரித்தது.
1894 சனவரி 1 - துறைமுக தலைமை அதிகாரிகள் (அடப்பான்) முறைமை கலைக்கப்பட்டு, பாரவள்ள குழுத்தலைவர்கள் நியமனம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
சனவரி2 -ஆசிரியர் பஸ்டியன் யாழ்ப்பாணத்தில் இறந்து போனார்.
1894 பெப்ரவரி3 - யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.
பெப்ரவரி 4 - ஓய்வு பெற்ற சப் கலக்டர் பிரெட்றிக் ஜோன் புள்ளே காலமானார்.
பெப்ரவரி13 -நாதன் ஸ்ரோங் மானிப்பாயில் காலமானார்.
பெப்24 பெரும் காணி பூமிக்காரரும் உடையாருமாகிய நாரனார் வாரித்தம்பி சாவகச்சேரியில் காலமானார்.
ஏப்ரல்1 -கொழும்பு 'வோக்கர் அன் சண்ஸ்' இல் நீண்ட காலம் வேலை செய்தவரான திரு. வில்லியம் மேதர் யாழ்ப்பாணம் திரும்பி வந்து சிலோன் நீராவிக்கப்பல் கம்பனியின் உள்ளுர் ஏஜென்ட் ஆக பொறுப்பேற்றார்.
ஏப்ரல்1 -யாழ்ப்பாண பேராலயத்துக்குட்பட்;ட சேமக்காலையில், ஓர் சிற்றாலயம் அமைப்பதற்கு அத்திவாரக்கல் இடப்பட்டது.
ஏப்ரல்6 -சவிரிமுத்து பிலிப்புப்பிள்ளை சுப்பிரமணிய முதலியார், மாந்தோட்ட அதிகாரி காலமானார்.
மே19 -திரு இருதய சகோதர சபையின் பொதுக்கூட்டத்தில், 'பாமரர்களாக எமது கடமை' என்னும் தலைப்பில் பஸ்டியாம்பிள்ளை முதலியார் மிகவும் யதார்த்தமான உரை நிகழ்த்தினார்.
ஆகஸ்ட் -'தேவைக்கு உதவும் நண்பர்கள்' அமைப்பிற்கு 'டெல்மெத் போர்கித் அன்கோ' தரகர் சுவாமிநாதன் நன்கொடையாக 1000ரூபா வழங்கினார். இவர் வெகுசன தொடர்பதிகாரி திரு. நவரட்ணசிங்கத்தின் மகனாவார்.
ஆகஸ்ட் -அல்வாய், புலோலி பகுதிகளில் பலருக்கு கொலரா நோய் பரவியது.
செப்டம்பர்15 -யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் தலைமை ஆசிரியர் திரு. ஏபிரகாம் அவர்களின் வெள்ளி விழா நடைபெற்றது.
ஒக்டோபர் -திரு கேட்ஸ்சிற்கு சொந்தமான அரியாலை பெருந்தோட்டத்தை 'எஸ்N;ரற்' வழக்கறிஞர் திரு காசிப்பிள்ளை 47000 ரூபாவுக்கு வாங்கினார்.
நவம்பர்10 -பளை மாவட்ட இஞ்சினியர் திரு றங்கநாதன் வண்ணார்பண்ணையில் காலமானார்.
நவம்பர்27 -சவிரிமுத்து சுப்பிரமணிய முதலியாரின் விதவை விலிந்தாபிள்ளை காலமானார்.
நவம்பர் -தமிழ் தாதியர்கள் பயிற்சியை மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு மானிப்பாய் ஆஸ்பத்திரியில் திருமதி ஸ்கொட் ஆரம்பித்தார். பின்னர் இதுபோன்று இணுவில் ஆஸ்பத்திரியிலும் ஆரம்பிக்கப்பட்டது
டிசம்பர்6 -த. சுவாம்பிள்ளை முதலியார் மன்னாரில் காலமானார்.
டிசம்பர் பதில் கடிதம் அனுப்பும் முறையை தபால் இலாகா ஆரம்பித்தது.
டிசம்பர்25 -யாழ்ப்பாண பேராலயத்தின் நூற்றாண்டு நிறைவு மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணத்தின் கத்தோலிக்க இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகவும், ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை கோவில் கட்டப்பட்டதை காட்டும் விதமாகவும,; கண்காட்சி அமைந்திருந்தது. கத்தோலிக்க இறை நம்பிக்கை இந்த பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டதை சுருக்கமாக விபரித்து ஜோன் எச் மாட்டின் ஒரு குறிப்பை வாசித்தார்.
1895 சனவரி -தபால் அதிபர் நாயகம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். அதன்போது வண்ணார்பண்ணையில், யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் ஓர் தபால் கந்தோர் அமைக்கக் கோரி ஓர் குழு மனுவை சமர்ப்பித்தது.
1895 பெப்ரவரி 26 -யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் கார்டியன் லிபல் வழக்கு விசாரணை நடந்தது.
மார்ச் 17 -இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புதிய தந்தி கேபிள் போடப்பட்டது.
மார்ச்17 -வண பிதா விஸ்தாரினி கொழும்பில் காலமானார்.
யூன் 1 -டச்சு சேமக்காலையில் உடல்களை புதைப்பது கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நிறுத்தப்பட்டது.
யூன் 12 - யேசுவின் திருஇருதய சகோதர அமைப்பின் பொதுக்கூட்டத்தில் 'சங்கங்களால் வரும் முன்னேற்றங்கள்' என்னும் தலைப்பில் யோன் எச் மார்ட்டின் ஓர் கட்டுரை படித்தார்.
ஆகஸ்ட்1கல்விமானும் சட்டவாளருமான செல்லாப்பாபிள்ளை, குடப்பார் - இந்தியாவில் காலமானார்.
ஆகஸ்ட்19 -கொழும்பு பெரிய தபால் கந்தோர் திறக்கப்பட்டது.
ஆகஸ்ட்24 –'சிலோன் பற்றியோற்' பத்திரிகை ஆசிரியர் டி.வை.என் சேனாதிராசா காலமானார். இவருடைய சகோதரர் ஓர் வழக்கறிஞர். இவர் ஓர் சட்டவாளர் ஆவார்.
செப்டம்பர்- - சேர்.ஏ.இ கவ்லொக் மட்ராஸ் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
செப்டம்பர் 5 -யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான ஆசிரியர் யோசப் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
செப்டம்பர்- - -இந்து உயர் பாடசாலை, புதிதாகக் கட்டப்பட்ட மாடிக்கட்டிடத்தில் கௌரவ. பொன். குமாரசாமி தலைமையில் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
செப்டம்பர்- பிறப்பு இறப்பு பிரதிகளை இலகுவாக்குவதற்கு ஏதுவாக யாழ்ப்பாண மணியகாரர் பகுதி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவை,
1. வண்ணார்பண்ணை மேற்கு முகமதியருக்கான பிரிவு,
2. வண்ணார்பண்ணை கிழக்கும் நல்லூரும் புரொட்டஸ்தாந்தினருக்கான பிரிவு,
3. சுண்டிக்குழி றோமன் கத்தோலிக்கருக்கான பிரிவு என்பனவாகும்.
1895 ஒக்டோபர்30- கொழும்பு சுங்க இலாகாவைச் சேர்ந்த சுந்தரத்தின் சகோதரர் முத்துத்தம்பி தைபோய்ட், காய்ச்சல் காரணமாக இறந்தார். முதல் நாள் இவரது சகோதரி இதே நோயால் மரணமானார். தனது சட்டப்பரீட்சையில் சித்தியடைந்த மறுநாள் அவர் இறந்து போனார்.
நவம்பர்6- யாழ்ப்பாண இறைவரி இலாகாவை சேர்ந்த இக்னேசியஸ் சவிரிமுத்து காலமானார். இவர் சுப்பிரமணிய முதலியாரின் மகன் ஆவார்.
நவம்பர ;9- சேர் வில்லியம் ருவைனாமின் பொன்விழா மிகவும் சிறப்பாக யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.
நவம்பர்- இலங்கைத்தீவில் உள்ள தமிழர்களுக்கென ஒரு மகாமுதலியார் நியமிக்கப்பட்டமை பெரும் ஆவலையும், திகிலையும,; கேள்வியையும் இலங்கைத் தீவில் ஏற்படுத்தியது.
நவம்பர் 11- யாழ் பேராலயத்தின் மூப்பனாரும் சென்பற்றிக்ஸ் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியருமான ஆர்தர் பிளெசீசர் காலமானார்.
நவம்பர் -விக்டோரியா முதியோர் இல்லம் திறந்து வைக்கப்பட்டது.
டிசம்பர் வலிகாமம் கிழக்கு மணியகாரராக திரு எஸ் துரைச்சாமி நியமிக்கப்பட்டார்.
1896 சனவரி1- - வட மாகாண அரச அதிபர் திரு வில்லியம் ருவைனம் சேர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
சனவரி4- வழக்கறிஞர் முத்தையா தெல்லிப்பளையில் மரணமானார். இவர் சாவகச்சேரி, பருத்தித்துறை ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் தொழில் புரிந்தார். 1896-சனவரி16 ஏப்ரல் 16 - ஓய்வுக்கு முன்னர் 3 மாத சம்பள லீவு சேர் வில்லியம் ருவைனமிற்கு வழங்கப்பட்டது. இவருடைய இடத்திற்கு திரு ஆர். டபிள்யு லிவர்ஸ் நியமிக்கப்பட்டார். சேர் ருவைனம் பழைய பூங்காவில் உள்ள தனது உத்தியோக பூர்வ இல்லத்தை விட்டு மரின் விலா ற்கு இடம்மாறினார்.
பெப்ரவரி20 பேராசிரியர், பத்திரிகையாசிரியர், கவிஞர் தமிழ்க்கல்விமான் ஆகிய ஜே ஆர் ஆர்னோல்ட் மானிப்பாயில் காலமானார்.
பெப்ரவரி22 யாழ்ப்பாணம் கோட்டையில் உள்ள ராணி மாளிகையில் பெரும் விருந்தளித்து சேர் வில்லியம் ருவைனம் கௌரவிக்கப்பட்டார்.
பெப்ரவரி24 அரச சட்டத்தரணி திரு. தம்பு பதில் பொலிஸ் மாஜிஸ்திரேட் ஆக யாழ்ப்பாணத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
மார்ச்2 கொழும்பு சென் யோசப் கல்லூரி திறக்கப்பட்டது.
மார்ச்6 ஓய்வு பெற்ற மணியகாரர் அரச நிலாயித்த முதலியார் சந்திரயோகுபிள்ளை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
மார்ச் சுருட்டு சுற்றும் தொழிலாளிகள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தின்னவேலி கல்லூரியில் ஆசிரியராக இருந்த திரு ஸ்மோல் சுளிபுரம் ஆங்கிலக் கல்லூரியின் தலைமை ஆசிரியராக, அதன் நிர்வாகி செல்லப்பா நியமித்தார்.
ஏப்ரல்17 யாழ்ப்பாண வர்த்தக கூட்டுறவு அமைப்பு உருவானது.
மே1 யாழ்ப்பாணம், 1896-1897க்கான சாராயக் குத்தகையை கச்சேரியில் ஏலத்தில் விட்டபோது கந்தர்மடத்தை சேர்ந்த ஆர் வேலுப்பிள்ளை அதனை 82000 ரூபாய்க்கு எடுத்துக்கொண்டார்.
யூலை15 பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகியவற்றின் பொலிஸ் மாஜிஸ்திரேட்டாக வழக்கறிஞர் நாகலிங்கம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
யூலை2 கீரிமலை புதிய சிவன் கோவில் கும்பாபிசேகம் இன்று நடைபெற்றது.
யூலை4 புத்தூர் நிலாவரை கிணற்றை பரிட்சாட்த்தமாக இறைத்துப்பார்க்கவும் நீரை சோதிக்கவும் வட மாகாண இஞ்சினியர் ரொமாகின், மாவட்ட நீதிபதி கமரூன் உடன் வந்திருந்தார்.
சட்ட முதுமானி திரு. சேதுபதி தனது 39வது வயதில் கொழும்பில் காலமானார்.
யூலை24 யாழ்ப்பாணம் கச்சேரி பழைய பூங்காவில் திருமதி லெவர்ஸ் முதன்முறையாக 'அட் கோம்' நிகழ்ச்சியை நடாத்தினார்.
செப்டம்பர் அரசு ஓர் கல்விச் சபையை உருவாக்கியது. பூலோகசிங்க முதலியார், திருச்செல்வர் காவியம் என்னும் கதையை, அச்சுசேலி ஞானப்பிரகாசர் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்.
ஒக்டோபர்6 மிசனரிமாரில் மூத்தவரான வண பிதா. மொரூவா ஓ.எம்.ஐ யாழ்ப்பாணத்தில் காலமானார்.
1896 ஒக்டோபர்30 சட்டவாளர் ஜே.ரி. நிக்கலஸ் நிக்கிலஸ்பிள்ளை சின்னத்தம்பியின் மூத்த புதல்வர் காலமானார். இவர் ஓர் சிறந்த, புத்திக்கூர்மையான சட்டவாளர் ஆகும்.
1897சனவரி15 கவர்னர் சேர் ஜோசப் வெஸ்ட் றிச்வே, கப்டன் ஜோர்ட் ஜாக்சன், சேர்.வி.கின்சி ஜெனரல் ரெய்லர் கணக்கு மேற்பார்வையாளர் நாயகம், கப்டன் கிருறெம் ஆகியோருடன் யாழ்ப்பாணம் வந்திறங்கி ராணிமாளிகைக்கு சென்றனர்.
சனவரி16 கௌரவ கவர்னர் மாளிகையில் மதிய உணவு உட்கொண்ட பின் மாலை விருந்தினர்களுக்கு தோட்ட விருந்து அளித்தார். பின்னர் முற்ற வெளியில் பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின் அவர் பொதுமக்களுக்கு உரை நிகழ்த்தினார். அன்று கோட்டை ஒளி வெள்ளத்தில் மிதந்தது. வாணவேடிக்கையும் நடந்தது.
சனவரி17 கவர்னர் புத்தூர் கிணற்றை பார்வையிட்டதுடன் காங்கேசன்துறைக்கும் விஜயம் செய்தார்.
சனவரி18 பொதுமக்கள் காரியாலயங்களிற்கு சோதனை விஜயம் செய்தார். 150 விதானைமாரை சந்தித்தார். ராணி மாளிகையில் ஓர் வரவேற்பு நடத்தினார். கவர்னரை மகிழ்விக்குமாறு ' தமயந்தி ' என்னும் நாடகம் மேடையேற்றப்பட்டது.
சனவரி19 கவர்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு திரு காஸ்ரிங்ஸ் இருந்தபோது விஜயம் செய்தார். பின்னர் ஊர்காவற்துறைக்கு விஜயம் செய்தார். அவருக்கு வண பிதா சந்திரசேகராவும் ஏனையோரும் அரச மரியாதையுடன் வரவேற்பளித்தனர்.
சனவரி20 சென்பற்றிக்ஸ் கல்லூரி, சென் சாள்ஸ் மிசன், சென் மார்ட்டின்ஸ் செமினறி, சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ் கன்னியர் மடம், வெஸ்ரியன் மத்திய கல்லூரி, வேம்படி பெண்கள் விடுதி, ஆகியவற்றிற்கு கவர்னர் விஜயம் செய்த பின்னர் மாலை 3மணிக்கு ஆனையிறவிற்கு சென்றார்.
சனவரி24 சுவாமி விவேகானந்தர், சிக்காகோவில் நடந்த சர்வதேச மதங்களுக்கான பாராளுமன்றத்திற்கு சென்று பின்னர் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். வண்ணார்பண்ணை இந்துக்கல்லூரியில் அவருக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.
சனவரி29 'அமலோற்பவ தியாகிகள்' அமைப்பின் உதவி மேலான்மையாளர் அதி.வண.பிதா கஸ்சியன் ஒகியர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் செய்தார். 1878ம் ஆண்டு வண.பிதா சூரியருக்கு வழங்கப்பட்டது போன்று பொது மக்கள் வரவேற்பு அளிக்கப்படவில்லை.
சனவரி29 கோப்பாயைச் சேர்ந்த திரு. மயில்வாகனம், யாழ் மாவட்டத்திற்கான சமாதான நீதவானாகவும், உத்தியோக பற்றற்ற பொலிஸ் மாஜிஸ்திரேட் ஆக யாழ்ப்பாண நீதி நிர்வாக பிரிவிற்கு நியமிக்கப்பட்டார்.
1897 ஏப்ரல்17 திருமதி ரூவைனம் 'பெல்வியூ விலா'வில் மரணமானார்.
ஏப்ரல் 19 திருமதி ருவைனத்தின் ஈமச்சடங்கிற்கு கொழும்பிலிருந்து சேர் வில்லியம்ஸ் வந்திருந்தார். அதற்கு முதல் நாளில் அவரின் உடம்பு சென் ஜோன்ஸ் சுண்டுக்குளி சேமக்காலையில் புதைக்கப்பட்டது. பெருமளவில் மக்கள் ஒன்று கூடினர்.
மே11 மகாராணியின் வைர விழாவை யாழ்ப்பாணத்தில் எவ்வாறு கொண்டாடுவது என்பது பற்றி ஆராய யாழ்ப்பாண அரச அதிபர் திரு பிஸ்சர் தலைமையில், யாழ் நீதிமன்ற வளவில் கூட்டம் நடாத்தப்பட்டது.
மே16 உதவி வரி அறவிடுவர் திரு வான் கூட்டன், 'சிங்கப்பூர் வைத்திலிங்கம்' எனப்படும் வைத்திலிங்கம் ஆகிய இருவரும் நீரிழிவு நோயால் மரணமடைந்தனர்.
1897 யூன் 20 மகாராணியின் வைரவிழா உலகம் பூராவும் பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
உடுவில் அமெரிக்க மிசன் ஆங்கில பாடசாலை திரு மையர்ஸ் ஆல் திறந்து வைக்கப்பட்டது.
ஆகஸ்ட்4 மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்த கனவான் வழக்கறிஞர் எஸ். நாகலிங்கம் மரணமானார்.
டிசம்பர்28 வண பிதா பொனிபாஸ் கூட்டன் மரணமானார்.
டிசம்பர்31 வடபகுதி ரெயில்வே கட்டுமான வேலைகளை ஆரம்பிக்கும்படி அரச செயலாளரிடம் இருந்து தந்தி வந்தது.
1898 சனவரி 13 யாழ்ப்பாணக்கச்சேரியில் 5வது லிகிதராக திரு. மனர்ஸ் பொறுப்பேற்றார்
சனவரி15 யாழ்ப்பாணக் கத்தோலிக்க பாதுகாவலன் பத்திரிகை தனது 23வது ஆண்டில் காலடிபதித்தது.
சனவரி27 யாழ்ப்பாண நீதிமன்ற வழக்கறிஞர் மன்றின் மூத்த அங்கத்தவர் திரு. பிறவுன் சின்னத்தம்பி காலமானார்.
பெப்ரவரி1 சென் பற்றிக்ஸ் கல்லூரியில் பழைய மாணவர் திரு ஜே.கிறகரி நில அளவையாளர் நாயகத்தின் காரியாலயத்தில் பயிற்சி பெற்று, சோதனையில் சித்தி எய்திய பின் வெளி நில அளவீட்டாளராக நியமிக்கப்பட்டார்.
பெப்ரவரி தமிழ் மொழியில் சுருக்கெழுத்து முறையை சென் பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் வண.பிதா. டன் கண்டு பிடித்தார். பின் இது பாடசாலையில் பாடமாகக் கற்பிக்கப்பட்டது.
பெப்ரவரி14 மன்னார் கச்சேரியில் 35 ஆண்டுகள் தலைமை லிகிதராக சேவை செய்த திரு. எல். பேர்துஸ் நீர் வீக்க நோயால் அளுத் மாவத்தையில் காலமானார். இவர் மரணிக்கும்போது அவருக்கு வயது 66.
மார்ச்5 திரு மனுவேல்பிள்ளை ராஜகாரியரின் மனைவி, கர்த்தரின் மரணமானார். உயர்ந்த பண்புகளைக் கொண்ட இப் பெண்மணி ஓர் சமூக சேவகியாவார்.
மார்ச்14 டாக்டர் வில்லியம் கபிரியேல் றொக்வூட் இலங்கை சட்டசபையின் தமிழ் மக்களின் பிரநிதியாக நியமிக்கப்பட்டார்.
மார்ச்14 டாக்டர் யூலான் ஆண்டகை, யாழ்ப்பாண ஆயர் ஐரோப்பாவிற்கு திரும்பிச் சென்றார்.
ஏப்ரல் 'சிலோன் ரைம்ஸ்' பத்திரிகை ஸ்தாபகரும், பத்தி எழுத்தாளரும், ஆசிரியருமான திரு. ஜோன் கப்பர் இங்கிலாந்தில் மரணமானார் என்று அறிவிக்கப்பட்டது.
மே11 அச்சுவேலியில் தில்லையம்பலம் சந்தியாபிள்ளை உடையார் தனது 84வது வயதில் காலமானார்.
மே27 ஜோன் கென்ஸ்மான் போதகரின் மனைவி அனா கெஸ்மான் மரணமானார். இவர் பிலிப்ஸ் மத்தியுவின் மகளாவார்.
மே28 டாக்டர் ஸ்ரோங் அரசக்கோன் முதலியார் மானிப்பாயில் மரணமானார்.
யூன் 26 யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான வர்த்தகர் சேதுபதி சூசைப்பிள்ளை மரணமானார்.
யூலை15 ஒரியன்ரல் வங்கியின் கட்டிடம் அதன் உரிமையாளர் காலம் சென்ற கெட்டின் வாரிசுகளால் விற்கப்பட்டது. இதை 15,500 ரூபாவிற்கு ராமன் செட்டி வாங்கினார்.
யூலை20 மானிப்பாய்க்கான தந்திக்கம்பி வழங்குவது பற்றி ஆராய தந்தி சேவை உப பரிசோதகர் திரு கொப்மான் யாழ்ப்பாணம் வந்தார்.
ஆவணி6 டாக்டர் ஸ்கொட்டின் நிர்வாகத்தின் கீழ் புதிய கட்டிடத்தில் மானிப்பாய் வைத்தியசாலை அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஆவணி12 எட்வர்ட் சத்துருகல்சிங்கி யாழ்ப்பாணத்தில் மரணமானார்.
ஆகஸ்ட் 29 மேன்மைதகு சேர் நோயல் வாக்கர் யாழ்ப்பாணம் வந்தார்.
ஆகஸ்ட் யாழ் மாவட்ட நீதிமன்ற பிரதம லிகிதர் திரு. ஜோன் நிக்கிலஸ் காலமானார். இவர் சுதேச வைத்தியர் டாக்டர் ஏபிரகாமின் மருமகனாவார்.
செப்டம்பர் 1 ஏரியன்ரன்ஸ் வங்கி காரியாலயத்தை அதன் கடைசி வாரிசு உரிமையாளர் திரு. ராமன் செட்டியிடமிருந்து 16500 ரூபய்க்கு அரசாங்கம் கையகப்படுத்தியது.
செப்டம்பர் 1 அனுராதபுரத்தில் உள்ள குடிவரவு காரியாலய அத்தியட்சகர் புவிராஜசிங்கியின் மனைவி சிசிலியா மிகிந்தலையில் மரணமானார். இவர் கென்றி மாட்டினின் கடைசி மகளாவார்.
செப்டம்பர் 24 பெண்கள் சிறுவர்களுக்கான மக்லியோட் விசேட வைத்தியசாலை இணுவிலில் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு பொறுப்பாக டாக்டர் இசபெல்லாகுர் இருந்தார்.
ஒக்டோபர் 17 யாழ்ப்பாண வைத்தியசாலை அலுவலகர் திரு. கந்தவனம் யாழ்ப்பாணத்தில் மரணமானார்.
ஒக்டோபர் 23 லுணுகல தபாலதிபர் முத்துக்குமாருவின் மனைவி சிசில் பொன்னம்மா யாழ்ப்பாணத்தில் மரணமானார். இவர் மட்ராஸ் பிறெசிடன்ஸ் கல்லூரியில் கல்வி கற்று, பின் மட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த திரு. சாமுவேல் நெலின்ஸ்பிள்ளையின் மகளுமாவார்.
"வரலாறு எமது வழிகாட்டி " - மனோகரன் மனோரஞ்சிதம் -