Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மார்க்சின் மாணவன் பெரியாரின் பேரன் நான்தான் - சீமான்!

.

மார்க்சின் மாணவன்,பெரியாரின் பேரன் நான்தான் சீமான் என்று
அனலடிக்க மேடைகளில் பேசத்தொடங்கிய சீமான்,
இன்று கடும் சொற்களில் பெரியாரை விமர்ச்சனம் செய்கிறார்.
திராவிட அரசியலில் பயணித்த தமிழ் உணர்வாளர்கள் பலரும் மெல்லமெல்ல இந்த நிலைக்கு கூடுதலாகவோ குறைவாகவோ வந்துள்ளதை காணமுடிகிறது.
ஈழப்போரில் திமுகவும் - திமுக சார்பு திராவிட இயக்கங்களும் மேற்கொண்ட நடத்தைகளும்,
அதன் பின் அதிகாரத்திற்கு வந்தபின் தமிழ்நாட்டின்
மொழி
பண்பாடு
வழிபாடு
தொழில்
வணிகம்
வேலைவாய்ப்பு
இயற்கைவளம்
இவற்றின் மீது திமுகவின் இரட்டைவேடமும் சுரண்டலும்,
இந்த தனது பிழைப்புவாதத்தை
" திராவிட மாடல்" என்று தம்பட்டம் அடித்ததும்,
அந்த தம்பட்டத்தை திராவிடத் தாங்கிகள் தாங்கி பரப்பியதும்
நியாயமான திராவிட எதிர்ப்பை தீவிரப்படுத்திவிட்டது.
திராவிட எதிர்ப்பென்பது
வினைக்கு எதிர்வினையே தவிர
முதல் வினையல்ல.
கலைஞர் கருணாநிதி பிழைப்புவாத அரசியல் நடத்திய போதும்,
தமிழைத் தாழ்த்தி திராவிடத்தை உயர்த்த துணியவில்லை.
பெரியார் சொன்னதாக
பாலியல் குறித்த சீமானின் கருத்து இப்போது ரசிக்கத்தக்கதல்ல.
அதற்கு ஆதாரம் கேட்கிறார்கள்.
சீமான் ஆதாரம் தரட்டும்.
ஆனால்
இதற்கு ஆதாரம் கேட்பவர்கள், ஆதாரமுள்ள பெரியாரின் கருத்துகளுக்கும் நேர்மையாக பதில் சொல்லவேண்டும்.
அடுத்தவர் மனைவியோடு உறவு வைத்துக் கொள்வது குற்றம் என்று சட்டத்தில் உள்ளதை எடுத்துவிட வேண்டும் என்று பெரியார் தீர்மானம் போட்டது,
மனைவியோடு கலவி செய்வது குற்றம் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு பைத்தியகாரத்தனம் குடிப்பதை குற்றம் என்று சொல்வது என்று பெரியார் சொன்னது,
சிலப்பதிகாரத்தை தே.....யா காப்பியம் என்றது,
திருவள்ளுவரை ஆரியக் கைக்கூலி என்றது,
தமிழ்ச் சனியனை விட்டுத் தொலையுங்கள் என்றது,
தமிழாய்ந்த புலவர்களை சோற்றுக்கு அலைபவர்கள் என்றது,
மொழிவழி மாநிலம் கேட்பது இனத்துரோகம் என்றது,
அண்ணாவை........மகன் என்றது,
என்ற பெரியாரின் நிலைப்பாடுகளுக்கும் பெரியாரியர்கள் பதில் சொல்லவேண்டும்.
வரலாற்றின் குப்பை கூளங்களை கிளறி அந்த நாற்றத்தை ஆய்வு செய்வதைவிட , ஆபத்தான பல களங்களில் நிற்க வேண்டிய தேவை இப்போது தமிழர்களுக்கு இருக்கிறது.
ஆனால் நாற்றத்தை நறுமணம் என்று தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் நிருபிக்க முயலும்போது
இதுபோன்ற சம்பவங்களும் நடந்துவிடுகிறது. 
முகநூல் பதிவு.