Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பதவி காலத்தை நீடிக்க ரணில் திட்டம்?: ஆதரவில்லை என்கிறது மகிந்த தரப்பு

.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்திற்கு வந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு ஆதரவளிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியாக தேர்தலை ஒத்திவைப்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பதாகவும், எனவே பதிவி நீடிப்பு தொடர்பான யோசனைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

19வது திருத்தச் சட்டத்தின் கீழ் 05 வருடங்களாக குறைக்கப்பட்ட ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மீண்டும் 06 வருடங்களாக நீடிக்கத் தயாராகி வருவதாக கூறப்படும் தகவல்களுக்கு பதிலளிக்கும் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச மக்கள் போராட்டத்தல் பதவி விலகியிருந்தார்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய காலத்திற்கு மட்டுமே ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்” என அவர் மேலும் கூறியுள்ளார்.